ஸ்டாலின் ஊழல் பைல்களைக் காணவில்லை என புகார்
சென்னை:
சென்னை மாநகராட்சி மேயர் மு.க. ஸ்டாலின் செய்ததாகக் கூறப்படும் ரூ.182 கோடி ஊழல் சம்பந்தப்பட்டபைல்களைக் காணவில்லை என சென்னை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் வெற்றிவேல் தமிழக முதல்வர்ஜெயலலிதாவிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களுக்குப் அளித்த பேட்டியில்,
மாநகராட்சியில் உள்ள முக்கிய பைல்களைத் தீ வைத்துக் கொளுத்தி அழித்து விட திமுக முயல்வதாகவும்,இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நான் தெரிவித்திருந்தேன்.
இதையடுத்து, சென்னை மாநகராட்சியில் தீயணைப்பு வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சிக்குச்சொந்தமான நிலத்தைச் சட்டத்துக்குப் புறம்பாக ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பான பைல்களைக் காணவில்லை.
நாங்கள் ஏற்கனவே சந்தேகப்பட்டது போலவே ஸ்டாலின் ஊழல் செய்ததாகக் கருதப்படும் ரூ.182 கோடிக்கானபைல்கள் காணாமல் போய்விட்டன.
இதுகுறித்து அதிகாரிகளிடம் இருந்தும் எந்த பதிலும் வரவில்லை. எனவே, இந்த விஷயத்தில் உடனடியாகநடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வரிடம் மனு கொடுத்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக முதல்வர்உறுதியளித்துள்ளார் என்று கூறினார் வெற்றிவேல்.












Click it and Unblock the Notifications