கோவையில் புகைபிடித்தால் ரூ.100 அபராதம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான பொது இடங்களில் புகைபிடித்தால் ரூ.100 அபராதம் விதிக்க மாநகராட்சிநிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பொது இடங்களில் புகைபிடிப்பதைத் தடை செய்ய மாநகராட்சி முடிவுசெய்துள்ளது.
காற்றில் ஏற்படும் நச்சுத் தன்மை, கண் எரிச்சல் போன்றவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க இந்தநடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதை மீறிப் புகை பிடிப்பவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
முதற்கட்ட நடவடிக்கையாக, மாநகராட்சிக்குச் சொந்தமான அலுவலகங்கள், பூங்கா, மருத்துவமனைகள் ஆகியஇடங்களில் இத்தடை அமலில் இருக்கும். பின்னர் இது படிப்படியாகப் பிற பகுதிகளுக்கும் நீட்டிக்கப்படும்.












Click it and Unblock the Notifications