போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து போலீசுக்கே அடி!
நாமக்கல்:
நாமக்கல்லில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் ஒரு போலீஸ்காரருக்கு அடிஉதை விழுந்தது.
நாமக்கல்லில் பஸ் ஸ்டாண்ட் அருகே டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது.அதனை மூர்த்தி என்பவர் ஓட்டிச் சென்றார். அந்த டிராக்டருக்கு முன் போலீஸ் எஸ்.ஐ.சந்திரன் ஒரு பைக்கில் சென்றுள்ளார். அப்போது, டிராக்டர் தவறுதலாக பைக் மீதுமோதியது.
இதில் ஏற்பட்ட தகராறில், டிராக்டரை போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓட்டி வரும்படி எஸ்.ஐ.கூறினார். மூர்த்தியும் டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார். ஆனால் வண்டியைப் போலீஸ்ஸ்டேஷனுக்கு வெளியே நிறுத்தாமல் உள்ளே நிறுத்தும்படி எஸ்.ஐ. மிரட்டியுள்ளார்.அதற்கு மூர்த்தி மறுத்து விட்டார்.
அப்போது அங்கு போலீஸ் ஜீப்பில் இன்ஸ்பெக்டர் வந்துள்ளார். கோபத்தில் இருந்தமூர்த்தி டிராக்டரைக் கொண்டு ஜீப் மீது மோத முற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், மூர்த்தியைப் பிடித்து வைத்திருப்பது குறித்து தகவல் அறிந்த அவரதுஉறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துள்ளனர். அங்கு பணியில் இருந்த நாகராஜ்என்ற போலீஸ்காரரைத் தாக்கினர். இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ. முன்னிலையிலேயேபோலீஸ்காரக் நாகராஜூம் பொதுமக்களும் கட்டிப் புரண்டு சண்டை போட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த நாகராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
போலீஸ் ஸ்டேஷனிலேயே ஒரு போலீஸை அடித்த சம்பவம் நாமக்கல்லில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.