காலியாக உள்ள அமைச்சர் பதவி யாருக்கு?.. புதுவையில் குழப்பம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அமைச்சரவையில் காலியாக இருக்கும் ஒரு அமைச்சர் பதவியை யாருக்கு அளிப்பது என்பதில்பெரும் குழப்பம் நிலவுகிறது.
பாண்டிச்சேரியில் முதல்வர் சண்முகம் தலைமையிலான காங்கிரஸ்-தமாகா கூட்டணி அமைச்சரவைபொறுப்பேற்றுள்ளது. இந்த அமைச்சரவையில் தற்போது ஒரு இடம் மட்டுமே காலியாக உள்ளது.
இந்தப் பதவிக்கு யாரை நியமிப்பது என்று எந்தவொரு முடிவும் எடுக்க முடியாமல் தவித்து வருகிறார் முதல்வர்சண்முகம்.
இந்நிலையில், அமைச்சரவையில் தலித்துகளுக்குப் போதிய இடம் அளிக்காதது தவறு என்று தலித் அமைப்பினர்முதல்வரைக் குறை கூறி வருகின்றனர்.
அதைவிட, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வலசைராஜுவுக்கு அமைச்சர் பதவி அளிக்காவிட்டால், மாஹே பகுதிகாங்கிரஸ் நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக கட்சிக்கு முழுக்குப் போடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
இதனால் யாருக்கு இந்த அமைச்சர் பதவியை அளிப்பது என்று குழம்பித் தவிக்கிறார் முதல்வர் சண்முகம்.












Click it and Unblock the Notifications