வந்தது மழை...உற்சாகத்தில் தமிழகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடும் கோடையில் வறண்டு போய் வானம் பார்த்து நின்றிருந்த தமிழகத்தில் மழைபெய்ய ஆரம்பித்துள்ளது.
அங்கு அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழைபெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.
கடந்த 3 நாட்களாகவே சென்னையில் நல்ல மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின்பிற பகுதிகளிலும் ஆங்காங்கே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
மதுரை, திருநெல்வேலி, விருதுநகர் உள்பட பல மாவட்டங்களில் அதிகமான மழைஅளவுகள் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு நிறுவன அதிகாரி கூறினார்.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் பலத்த மழையும், பிறமாவட்டங்களில் இலேசானது முதல் மிதமானது வரை மழையும் பெய்யும் என்றும்அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications