For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமரை சந்தித்தார் ஜெயலலிதா

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் வாஜ்பாயை செவ்வாய்க்கிழமை காலை சந்தித்தார்.

பொதுவாக, முதல்வராகப் பதவி ஏற்பவர்கள் மரியாதை நிமித்தமாக பிரதமரைச் சந்திப்பது மரபு வழக்கம்.அதன்படி, தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமரைச் சந்திக்க திங்கள்கிழமை மாலை டெல்லி புறப்பட்டார்.

அதன்படி, தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி சென்ற ஜெயலலிதா பிரதமர்வாஜ்பாயைச் சந்தித்துப் பேசினார்.

மேலும், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, உள்துறை அமைச்சர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஆகியோரையும் ஜெயலலிதா சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் இந்த டெல்லி பயணம் மரியாதை நிமித்தமானதுதான் என்று சொன்னாலும், இப்பயணம்அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கப் போவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

சர்க்காரியா கமிஷன் அடிப்படையில், ஜெயலலிதாவின் முக்கிய அரசியல் எதிரியும் முன்னாள் முதல்வருமானகருணாநிதி மேல் வழக்கு தொடர, அவர் பிரதமரின் அனுமதியைக் கேட்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

வாஜ்பாய்-ஜெயலலிதா சந்திப்பின் விவரம் குறித்து வேறு எந்தத் தகவலும் இல்லை.

குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனையும் ஜெயலலிதா சந்திக்க உள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X