ஜெ.முதல்வரானதை எதிர்த்து வழக்கு: ஜூன் 11ல் விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதா தமிழக முதல்வரானதை எதிர்த்து ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி சென்னைஉயர்நீதிமன்றத்தில் பொதுநலன் கருதி தொடர்ந்த மனு மீதான விசாரணை ஜூன் 11 ம் தேதி நடத்தப்படுகிறது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, ஊழல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற ஜெயலலிதா தேர்தலில்போட்டியிடும் தகுதியையே இழந்து விட்டார். இந்த நிலையில் அதிமுக கடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றதுஎன்பதற்காக ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கக் கூடாது.

சட்ட விதிமுறைகளைப் புறக்கணித்து ஜெயலலிதா தமிழக முதல்வரானதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்யவேண்டும் என்று வழக்குத் தொடர்ந்திருந்தார் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி.

இதற்கிடையில் சுவாமி புதன்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்துக்குச் சென்று ஜெயலலிதா முதல்வரானதை எதிர்த்துதான் தாக்கல் செய்துள்ள மனு குறித்து விரைவில் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நீதிபதிகள் ஜெயின் மற்றும் தங்கவேல் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் இந்த மனு மீதான விசாரணைதிங்கள்கிழமை நடக்கும் என்று தெரிவித்தது.

ஜெயலலிதா தமிழக முதல்வரானதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டிலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுமீதான விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த நேரத்தில் டான்சி நிலப்பேர ஊழல் மற்றும் பிளசன்ட் ஸ்டே ஊழல் வழக்குகளை ரத்து செய்யும்படிஜெயலலிதா மேல்முறையீடு செய்துள்ள மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றுகேட்டுக் கொண்டார் சுவாமி. இதற்கு தனியாக ஒரு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று கோர்ட் கேட்டுக்கொண்டது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+