For Daily Alerts
Just In
அண்ணன் திட்டினார் .. தம்பி தொங்கினார்
சென்னை:
அண்ணன் திட்டியத்தைத் தாங்க முடியாத தம்பி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை முகப்பேர் 10-வது பிளாக்கில் வசித்து வந்தவர் விநாயகம் (28). இவர் தனது அண்ணனுடன் ஒரேவீட்டில் வசித்து வந்தார்.
திங்கள்கிழமை இரவு விநாயகத்தைத் தேடி ஒரு இளம்பெண் இரவு 11 மணிக்கு மேல் வீட்டுக்கு வந்துள்ளார்.இவ்வளவு நேரம் கழித்து பெண்ணை வீட்டுக்கு வர சொல்வதா என்று கேட்டு விநாயகத்தை அவரது அண்ணன்கோபித்துள்ளார்.
இதனால் மன வருத்தமடைந்த தம்பி விநாயகம் வந்த பெண்ணை வீட்டுக்கு அனுப்பி விட்டு தூக்குப் போட்டுத்தற்கொலை செய்து கொண்டார். திருமங்கலம் போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
Comments
Story first published: Wednesday, June 6, 2001, 5:30 [IST]