காஷ்மீரில் 18 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த மே 31 ம் தேதியுடன் சண்டை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்ட நிலையில்புதன்கிழமை நள்ளிரவு ராணுவ வீரர்கள், 18 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் அனைவரும் வெளிநாட்டுத் தீவிரவாதிகள் என்று அடையாளம்காணப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.
இச்சம்பவம் குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், காஷ்மீர் எஸ்.எம்.எச்.எஸ் மருத்துவமனைஅருகேயுள்ள போலீஸ் நிலையத்துக்குள் தீவிரவாதிகள் புகுந்து போலீஸ் கான்ஸ்டபிள்கள் குலாம் ரசூல் மற்றும்அலி முகமது ஆகியோரை சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து ராணுவ வீரர்கள் அப்பகுதி முழுவதும் வீடு வீடாகச் சென்று தீவிரவாதிகளைத் தேடினர். அப்போதுகாஷ்மீரின் வடக்குப்பகுதியில் உள்ள பாரமுல்லா மாவட்டம் சோப்பூர் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அப்போது தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையேகடும் சண்டை ஏற்பட்டது. இதில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.
டாங்க்மார்க் பகுதியில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தினர்.
பாரமுல்லா பகுதியில் உள்ள அனந்தநாக் பகுதியில் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிமருந்துகளுடன்சுற்றிக்கொண்டிருந்த தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதே போல் தோடா மாவட்டத்தில் உள்ள உதய்ப்பூரில் நடந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
சூரன்கோட்டே பகுதியில் 5 தீவிரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர். அவர்களிடமிருந்து துண்டுபிரச்சாரங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.
இதே போல் பூஞ்ச் மாவட்டம் சாவ்ஜியான், செச்சியான் மற்றும் காச்சர்வான் பகுதிகளில் ராணுவ வீரர்கள் நடத்தியதாக்குதலில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் வெளிநாட்டுத் தீவிரவாதிகள் என்றுஅடையாளம் காணப்பட்டுள்ளது.
இதுதவிர வெவ்வேறு இடங்களில் நடந்த தாக்குதலில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
கடந்த மே 31 ம் தேதியிலிருந்து இதுவரை ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 50 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள்சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications