அமெரிக்க அதிபர் புஷ் இந்தியா வருகை
வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் விரைவில் இந்தியா வரவிருக்கிறார்.
அவருடைய இந்திய விஜயத்தின் போது, பல பொருளாதார ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.இந்திய-அமெரிக்க பொருளாராதார வளர்ச்சிகள் பற்றிய முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளன.
புஷ்ஷின் இந்திய வருகைக்கு முன்னதாகவே இந்தியா மீதான பொருளாதாரத் தடைகள் யாவும் நீக்கப்பட்டுவிடும்என்றும் இதுபற்றி விரைவில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் அனைத்தும் தற்காலிகமானவையே. அவை யாவும்விரைவில் விலக்கிக் கொள்ளப்படும் என்று புஷ்ஷின் அமெரிக்க வருகை பற்றி அறிவித்த அமெரிக்க அமைச்சர்கூறினார்.
ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்ற பின்னர், அங்கு ஏற்பட்ட கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக,சாப்ட்வேர் கம்பெனிகளிலிருந்து ஏராளமான இந்திய சாப்ட்வேர் நிபுணர்கள் இந்தியாவிற்கே திரும்பஅனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.