நார்வே தூதர் ஒதுக்கப்படுகிறாரா?
கொழும்பு:
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான அமைதிப் பேச்சு வார்த்தைக்கான சூழ்நிலையைஏற்படுத்தும் முயற்சியில் இனி நார்வே அரசு ஈடுபடும் என இலங்கை அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இதுவரை அமைதிப் பேச்சுவார்தையை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நார்வே தூதர் எரிக் சோல்ஹேமைஇலங்கை அரசு ஒதுக்கியுள்ளதோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தியுள்ளது.
நார்வே அமைதி தூதரான சோல்ஹேம் 15 மாதங்களாக இலங்கை அரசையும், விடுதலைப்புலிகளையும் அமைதிப்பேச்சுவார்த்தையில் ஈடுபட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆனால் அவரது முயற்சியில் இதுவரை எந்தவிதமான பலனும் ஏற்படவில்லை.
விடுதலை புலிகள் தங்கள் மீது இலங்கை அரசு விதித்துள்ள தடையை நீக்கவேண்டும் என கோரி வருகின்றனர்.ஆனால் இதற்கு இலங்கை அரசு மறுத்து விட்டதால் பேச்சு வார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டது.
இந்நிலையில்தான் தோர்ப்ஜோர்ன் ஜாக்லான்ட் வியாழக்கிழமை மாலை எரிக் சோல்ஹேமுடன் இலங்கை வந்தார்.அவர் இலங்கை அதிபர் சந்திரிகாவுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வெள்ளிக்கிழமை உடனே நார்வே கிளம்பிசென்று விட்டார்.
இனி இலங்கை அரசுக்கும்,விடுதலைப்புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கானசூழ்நிலை குறித்த உயர்மட்ட விஷயங்களில் நார்வே அரசு ஈடுபடும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் இதுவரை தூதராக இருந்த எரிக் சோல்ஹேம் தொடர்ந்து அந்த பணியில் ஈடுபடுவாரா என்பது குறித்துஎதுவும் கூறப்படவில்லை.
இலங்கை அரசின் இந்த அறிவிப்பு நார்வேயின் வெளியுறவுத்துறை அமைச்சர் தோர்ப்ஜோர்ன் ஜாக்லான்ட்,வியாழக்கிழமை இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவை சந்தித்து பேசிவிட்டு நார்வே கிளம்பிச் சென்றபின்வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
வியாழக்கிழமை நார்வே வெளியுறவுத்துறை அமைச்சரும், அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சியில் ஈடுபட்டிருந்தநார்வே தூதர் எரிக் சோல்ஹேமும் இலங்கை வந்தனர்.
நார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை அதிபர் சந்திரிகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தபேச்சுவார்த்தையில் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமரும் கலந்து கொண்டார்.ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எரிக் சோல்ஹேம் கலந்து கொள்ளவில்லை.
இது குறித்து நார்வே தூதரக அதிகாரி டோமாஸ் ஸ்டான்ஜ்லான்ட் செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்தபேச்சுவார்த்தை இலங்கை அதிபருக்கும், நார்வே வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இடையேயானபேச்சுவார்த்தை என்றார்.
ஆனாலும் அவர் பேச்சுவார்த்தையில் எரிக்சோல்ஹேம் பங்கேற்காதது பற்றி எதுவும் கூற மறுத்து விட்டார்.அரசியல் நோக்கர்கள் கூறுகையில், எரிக் சோல்ஹேம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார் என கூறுகின்றனர்.
இலங்கை அரசின் அறிவிப்பு அமைதிப் பேச்சுவார்த்தையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா எனபொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications