நார்வே தூதர் ஒதுக்கப்படுகிறாரா?
கொழும்பு:
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான அமைதிப் பேச்சு வார்த்தைக்கான சூழ்நிலையைஏற்படுத்தும் முயற்சியில் இனி நார்வே அரசு ஈடுபடும் என இலங்கை அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இதுவரை அமைதிப் பேச்சுவார்தையை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நார்வே தூதர் எரிக் சோல்ஹேமைஇலங்கை அரசு ஒதுக்கியுள்ளதோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தியுள்ளது.
நார்வே அமைதி தூதரான சோல்ஹேம் 15 மாதங்களாக இலங்கை அரசையும், விடுதலைப்புலிகளையும் அமைதிப்பேச்சுவார்த்தையில் ஈடுபட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆனால் அவரது முயற்சியில் இதுவரை எந்தவிதமான பலனும் ஏற்படவில்லை.
விடுதலை புலிகள் தங்கள் மீது இலங்கை அரசு விதித்துள்ள தடையை நீக்கவேண்டும் என கோரி வருகின்றனர்.ஆனால் இதற்கு இலங்கை அரசு மறுத்து விட்டதால் பேச்சு வார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டது.
இந்நிலையில்தான் தோர்ப்ஜோர்ன் ஜாக்லான்ட் வியாழக்கிழமை மாலை எரிக் சோல்ஹேமுடன் இலங்கை வந்தார்.அவர் இலங்கை அதிபர் சந்திரிகாவுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வெள்ளிக்கிழமை உடனே நார்வே கிளம்பிசென்று விட்டார்.
இனி இலங்கை அரசுக்கும்,விடுதலைப்புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கானசூழ்நிலை குறித்த உயர்மட்ட விஷயங்களில் நார்வே அரசு ஈடுபடும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் இதுவரை தூதராக இருந்த எரிக் சோல்ஹேம் தொடர்ந்து அந்த பணியில் ஈடுபடுவாரா என்பது குறித்துஎதுவும் கூறப்படவில்லை.
இலங்கை அரசின் இந்த அறிவிப்பு நார்வேயின் வெளியுறவுத்துறை அமைச்சர் தோர்ப்ஜோர்ன் ஜாக்லான்ட்,வியாழக்கிழமை இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவை சந்தித்து பேசிவிட்டு நார்வே கிளம்பிச் சென்றபின்வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
வியாழக்கிழமை நார்வே வெளியுறவுத்துறை அமைச்சரும், அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சியில் ஈடுபட்டிருந்தநார்வே தூதர் எரிக் சோல்ஹேமும் இலங்கை வந்தனர்.
நார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை அதிபர் சந்திரிகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தபேச்சுவார்த்தையில் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமரும் கலந்து கொண்டார்.ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எரிக் சோல்ஹேம் கலந்து கொள்ளவில்லை.
இது குறித்து நார்வே தூதரக அதிகாரி டோமாஸ் ஸ்டான்ஜ்லான்ட் செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்தபேச்சுவார்த்தை இலங்கை அதிபருக்கும், நார்வே வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இடையேயானபேச்சுவார்த்தை என்றார்.
ஆனாலும் அவர் பேச்சுவார்த்தையில் எரிக்சோல்ஹேம் பங்கேற்காதது பற்றி எதுவும் கூற மறுத்து விட்டார்.அரசியல் நோக்கர்கள் கூறுகையில், எரிக் சோல்ஹேம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார் என கூறுகின்றனர்.
இலங்கை அரசின் அறிவிப்பு அமைதிப் பேச்சுவார்த்தையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா எனபொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications