ரெங்கநாதன் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை:
தேர்தல் நிதி கேட்டு நீதிபதி மகனை மிரட்டிய புகார் வழக்கில் கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. ரெங்கநாதனின்ஜாமீன் மனு சென்னை செசன்சு கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டது.
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி சதாசிவத்தின் மகன் ரத்தினவேலுவிடம் தேர்தல் நிதியாகரூ.3 லட்சம் கேட்டதாகவும், தராததால் துப்பாக்கியால் மிரட்டியதாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப்பேரவையைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ரெங்கநாதன் மீது ரத்தினவேலு புகார் கொடுத்தார்.
இதையடுத்து கடந்த மே மாதம் 26ஆம் தேதி ரெங்கநாதன் கைது செய்யப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டார்.பின்னர் ரெங்கநாதன் ஜாமீன் மனு கேட்டு சென்னை செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி சின்னப்பன், ரெங்கநாதன் மீது மேலும் பல புகார்கள் இருப்பதாலும், இன்னும் போலீஸ்விசாரணை முடியவில்லை என்பதாலும், இந்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறி தீர்ப்பளித்தார்.