சேலம் அருகே டிராக்டர் மீது ரயில் மோதி 2 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சேலம் அருகே டிராக்டர் மீது ரயில் மோதியதில் 2 பேர் இறந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (23). இவளது கணவன் சுப்ரமணி,விவசாயி. இவர் குழந்தைகள் பட்டத்தான் (7) மற்றும் மீனா (3).

இந்த 2 குழந்தைகளுக்கும் முடி எடுத்து, காது குத்து விழாவை பாப்பாத்தி அம்மன் கோவிலில் நடத்த விரும்பினர்.எனவே, ஒரு டிராக்டரை வாடகைக்கு அமர்த்தினர். இவர்களுடன் உறவினர்களும் அதில் சென்றனர். சுமார் 30 பேர்ஒரே டிராக்டரில் ஏறிச் சென்றனர்.

ஒரு ரயில்வே வளைவுப் பாதை அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்துகொண்டிருந்த ரயிலை டிராக்டரின் டிரைவர் கவனிக்கவில்லை. இதனால், ரயில் டிராக்டர் மீது மோதியது.

இதில் டிராக்டரில் பயணம் செய்த கலியன் (5), வெங்கடேஷ் (17) என்ற இருவரும் அதே இடத்தில் இறந்தனர்.மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+