For Daily Alerts
Just In
இலங்கையில் 20 புலிகள், 19 ராணுவத்தினர் பலி
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப்புலிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
கிழக்கு இலங்கையின் வாலைச்சேனை பகுதியில், இலங்கை ராணுவ முகாம் மீது விடுதலைப்புலிகள் இந்தத்தாக்குதலை நடத்தினர். இதில் 21 பேர் இறந்தனர். இவர்களில் 19 பேர் ராணுவத்தினர். 2 பேர் பொதுமக்கள்.
வல்வெட்டித்துறை மாவட்டத்திலுள்ள காவாத்துமுனை கிராமத்தில் இலங்கை ராணுவம் நடத்திய வேறு ஒருதாக்குதலில் 12 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். 4 பேர் கடுமையான காயமடைந்தனர். இங்குவிடுதலைப்புலிகள் நடத்திய ஷெல் தாக்குதலில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், இலங்கை முழுவதும் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 8 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர்.
Comments
Story first published: Saturday, June 9, 2001, 5:30 [IST]