மண்டபம் முகாமில் விடுதலைப்புலி கைது
ராமேஸ்வரம்:
மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் பதுங்கியிருந்த ஒரு விடுதலைப்புலி கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் நடந்து வரும் இனக் கலவரம் காரணமாக, இலங்கைத் தமிழர்கள் குடும்பம் குடும்பமாகதமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் மண்டபத்தில் உள்ளஅகதிகள் முகாமில் தங்க வைக்கப் படுகிறார்கள்.
தற்போது அகதிகள் முகாமின் சிறப்புப் போலீஸ் அதிகாரியாக அலெக்சாண்டர் பதவி பொறுப்பு ஏற்றுள்ளார்.இதைத் தொடர்ந்து, முகாமில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
அப்போது, ஒரு வாலிபரின் நடவடிக்கையில் போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவரைப் பிடித்து விசாரணைநடத்திய போது, அவருடைய பெயர் விஜகுமார் என்றும் வவுனியாவில் உள்ள ஆசிகுளத்தைச் சேர்ந்தவர் என்றும்தெரிய வந்தது.
இவரை மேலும் துருவித் துருவி விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இலங்கையில் உள்ளவிடுதலைப்புலிகளிடம் இவர் சிறப்பு பயிற்சி பெற்றவர் என்றும், தொடர்ந்து விடுதலைப்புலிகளின் எல்லைப்பாதுகாப்புப் படையில் பணியாற்றியவன் என்றும் தெரிய வந்தது.
இவர் தற்போது வேலூரில் உள்ள சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவர் ஏன் வந்தார் என்றுவிசாரணை நடந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து அகதிகள் முகாமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.