Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவசாயிகள் கடன் வட்டி தள்ளுபடி: வரவேற்கிறது சி.பி.ஐ.

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

விவசாயிகளுக்கான கடன் வட்டியையும் அபராத வட்டியையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தள்ளுபடி செய்ததைஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) வரவேற்றுள்ளது.

சி.பி.ஐ.யின் தேசிய செயலாளர் டி.ராஜாவும், தமிழ்நாடு செயலாளர் நல்லகண்ணுவும் கூட்டாக வெளியிட்டுள்ளஅறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.

அவர்கள் மேலும் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு அறிவித்துள்ள ரூ 310.51 கோடி அளவிலான கடன்வட்டி தள்ளுபடி விவசாயிகளுக்கு பெருமளவில்பலனளிக்கக்கூடியது. ஆனால், விவசாயிகள் கடனை திரும்பச் செலுத்துவதற்கான காலகட்டத்தை அரசுநீட்டிக்கவேண்டும்.

ஜெயலலிதாவுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தது சரிதான். அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களால், அ.தி.மு.க.சட்டசபைத் தலைவரவாக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதனால் அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தது தவறல்ல.

தி.மு.க.வும், தமிழக பா.ஜ.க.வும் தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என கூறுவதை எதிர்த்துஉயர்மட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

உள்ளாட்சி தேர்தல் இந்த ஆண்டு செப்டம்பர் நடத்தப்படும் என தமிழக ஆளுநர் அறிவித்துள்ளார். அதைவரவேற்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க.வுடனான எங்கள்கூட்டணி தொடரும்.

உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் முன், வாக்காளர் பட்டியல் சரிப்படுத்தப்படும் எனவும் தீர்மானம்நிறைவேற்றியிருக்கிறோம் என்றனர்.

நல்லகண்ணு கூறுகையில், தமிழக விவசாயிகள் கடும் தண்ணீர் பஞ்சத்தால் வாடி வருவதால், காவேரி நடுவர்மன்றத்தை விரைவில் தீர்ப்பு வழங்குமாறு அரசு வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+