பங்காரு அடிகளாரிடம் அமைச்சர்கள் ஆசி
சென்னை:
சென்னை அருகே உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சக்தி பீடத்திற்குச் சென்று பங்காருஅடிகளாரை தமிழக அமைச்சர் சரோஜா சந்தித்து ஆசி பெற்றார்.
தமிழக அமைச்சர்கள் பலரும் பங்காரு அடிகளாரைச் சந்தித்து ஆசி பெற்று வருகின்றனர்.புதிதாக உயர் பதவி ஏற்பவர்கள் பங்காரு அடிகளாரைச் சந்தித்து ஆசி பெறுவதுவழக்கமாகி உள்ளது. அந்த வரிசையில் சமீபத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில்அமைச்சர்களாக பதவியேற்றவர்கள் பங்காரு அடிகளாரைச் சந்தித்து ஆசி பெற்றனர்.
பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம், முன்னாள் அமைச்சர் ராமசாமி ஆகியோரும் சமீபத்தில்அடிகளாரைச் சந்தித்து ஆசி பெற்றனர்.
இந்த நிலையில் திங்கள்கிழமை சற்றுலாத் துறை அமைச்சர் உப்பிலியாபுரம் சரோஜாவும்பங்காரு அடிகளாரைச் சந்தித்து ஆசி பெற்றார். அவருடன் அவரது கணவரும்வந்திருந்தார். அடிகளாரைச் சந்தித்து வணங்கி ஆசி பெற்ற அமைச்சர் சரோஜா பின்னர்ஆதிபராசக்தி பீடத்தில் பல்வேறு அர்ச்சனைகள் செய்தார்.
இதேபோல, அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், துரைராஜ், சண்முகம் ஆகியோரும் பங்காருஅடிகளாரைச் சந்தித்து ஆசி பெற்றனர்.












Click it and Unblock the Notifications