கோவை வங்கி கொள்ளையில் குழப்பம் நீடிப்பு
கோவை:
கோவை அருகே உள்ள வங்கியில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் எவ்வளவு நகை மற்றும் ரொக்கம்கொள்ளையடிக்கப்பட்டது என்பதில் குழப்பமான நிலையே நீடித்து வருகிறது.
கோவை அருகே உள்ள குறிச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் உள்ளது. இந்த பாங்க்கில், ஞாயிற்றுக்கிழமை இரவுகொள்ளை நடந்தது.
இந்த கொள்ளைச் சம்பவத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள தங்க நகை மற்றும் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டதுஎனக் கூறப்பட்டது. பின்னர் இந்த மதிப்பீடு குறைந்து, சில லட்ச ரூபாய் மட்டுமே கொள்ளை போனது என போலீஸ்தரப்பில் கூறப்பட்டது.
போலீசார் முதலில் கோடிக் கணக்கில் கூறிய தகவல்கள், பின்னர் குறைந்து போனது. பாங்க்கில் இருந்த நகை மற்றும்ரொக்கம் கணக்குப் பார்த்ததில் 1.8 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போனதாகக் கூறப்பட்டது.பின்னர் இது மேலும் சில நகைகள் பாதுகாப்பாக தலைமை வங்கியில் இருப்பதாகக் கருதப்பட்டது.
இறுதியாக போலீசார் தற்போது 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளே கொள்ளைபோனது எனக் கூறியுள்ளனர்.இன்னும் கொள்ளை போன நகைகள் மற்றும் ரொக்கம் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே இது குறித்து இறுதி முடிவுஎடுக்கப்படும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.