For Daily Alerts
Just In
காவிரி நதிநீர் ஆணைய முடிவுக்கு கர்நாடகம் எதிர்ப்பு
பெங்களூர்:
காவிரி நீர் படுகையில் ஏரிகளில் தூர் வாரும் பணிக்கு மத்திய நதிநீர் கமிஷன் விதித்துள்ள தடை உத்தரவுக்குகர்நாடகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எச்.கே.பட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
காவிரி ஆற்றுப் படுகையில் தூர்வாரும் பணிக்கு மத்திய நதி நீர் ஆணையம் தடை விதித்துள்ளது. இதைஒருபோதும் கர்நாடகம் ஏற்காது.
காவிரி ஆற்றுப்படுகையில் தூர் வாருவது எங்களது உரிமை. இதைப்பறிக்க யாரும் முயலக் கூடாது. உலக வங்கிதூர் வாரும் பணிக்கு கடன் வழங்கினாலும், வழங்காவிட்டாலும் நாங்கள் தூர் வாருவோம். இதற்கு தமிழக அரசுதடை விதிக்கவில்லை.
காவிரி ஆற்றுப்படுகையில் 8000 ஆண்டு பழமையான ஏரிகள் உள்ளன. இங்கு தூர் வாரும் பணி திட்டமிட்டபடிநடக்கும் என்றார்.
Story first published: Tuesday, June 19, 2001, 5:30 [IST]