நெய்வேலி தண்ணீர் சென்னை வந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நெய்வேலியிலிருந்து கொண்டு வரப்பட்ட குடிநீர் சென்னைக்கு வந்து சேர்ந்தது. செவ்வாய்க்கிழமை சென்னைநகரில் நெய்வேலி தண்ணீர் விநியோகம் செய்யப்படவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன.

சென்னை நகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதைத் தீர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகளைமுதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு கட்டமாக நெய்வேலியிலிருந்து லாரிகள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாகஈரோட்டிலிருந்து ரயில்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்படவுள்ளது.

நெய்வேலி குடிநீர் திங்கள்கிழமை சென்னைக்கு வந்து சேர்ந்தது. முதல் லாரி பிற்பகல் 12 மணியளவில் சென்னைவந்து சேர்ந்தது. பிற லாரிகள் அதைத் தொடர்ந்து வந்தன. மொத்தம் 12 லாரிகள் வந்துள்ளன. தினசரி 500லாரிகள் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு லாரியிலும் 10,000 லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. தினசரி 200 மில்லியன் தண்ணீரைவிநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து லாரிகளும் நேராக கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்குதண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டது. இந்த லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ள தண்ணீர் செவ்வாய்க்கிழமைமுதல் சென்னை நகரில் விநியோகிக்கப்படவுள்ளது.

நெய்வேலி குடிநீர் லாரிகள் தவறுதலாக பயன்படுத்துவதைத் தடுக்கவும், முறையாக நகருக்குள் வந்து சேருவதைஉறுதி செய்யவும் செங்கல்பட்டு, திண்டிவனம் ஆகிய பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+