மலைக் கோவில்களில் அதிரடிப்படை கண்காணிப்பு
மேட்டூர்:
மலைப் பகுதியில் உள்ள கோயில்களைக் கண்டறிந்து வீரப்பன் இருக்கும் இடத்தைக் கண்காணிக்க அதிரடிப்படைமுடிவு செய்துள்ளது.
பொதுவாக வீரப்பன் தெய்வபக்தி நிரம்பியவன் என்பதால், சில கோயில்களில் வழிபாடு நடத்த வீரப்பன் வரக்கூடும் என அங்கு கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன.
மேலும், தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள பாலாறு பாலத்தில் மணல் மூட்டைகள் அடுக்கி வீரப்பனைக்கண்காணிக்கும் பணியில் கர்நாடக அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேட்டூர் அருகே பாலாறு பாலம் கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் தான் முன்பு வீரப்பன்வனத் துறை அதிகாரி ஒருவரைச் சுட்டுக் கொன்றார். எனவே, தற்போது மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு தீவிரப்பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கொளத்தூர் பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கண்காணிப்பைத்தீவிரப்படுத்தியுள்ளது அதிரடிப்படை.