Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவுகள பிடிக்க முடியாது: வீரப்பன் மனைவி சவால்

Subscribe to Oneindia Tamil

கோவை:

ஆண்டுக் கணக்கில் தேடினாலும் எனது கணவரைப் பிடிக்க முடியாது என சவால் விட்டுள்ளார் வீரப்பனின் மனைவிமுத்துலட்சுமி.

மேட்டூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

என் கணவருடன் சேர்ந்து வாழவிடாமல், என்னை போலீசார் பழிவாங்கி வருகின்றனர். பண்ணாரி முகாமில் 2ஆண்டுகள் என்னை சிறை வைத்து சித்திரவதை செய்தனர். இப்போது விடுதலை செய்யப்பட்டாலும், நான்சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அல்லல் பட்டு வருகின்றேன்.

பிழைப்பு நடத்த ஒரு பெட்டிக் கடை வைத்திருந்தேன். ஆனால், அதில் எவ்வித லாபமும் இல்லாததால் அதைமூடிவிட்டேன். இப்போது டைலரிங் தொழில் செய்து வருகிறேன். இருந்தாலும், என்னை தொழில் செய்ய விடாமல்உளவுப் பிரிவு போலீசார் துன்புறுத்தி வருகின்றனர். இதனால், எனது மகளை தனியார் பள்ளி விடுதி ஒன்றில்சேர்த்து விட்டேன்.

போலீசார் எத்தனை ஆண்டுகள் தேடினாலும், என் கணவரைப் பிடிக்க முடியாது. இதுவரை அவர்களுக்குதோல்வியே ஏற்பட்டுள்ளது. இனியும் அவர்களுகுத் தோல்விதான் கிடைக்கும்.

கோவை மாவட்டம் வாளையாறில் என் கணவரைப் பார்த்தாகப் போலீசார் கூறினர். ஆனால், என் கணவர் அங்குசெல்ல வாய்ப்பே இல்லை. மாறன் யார் என்று எனக்குத் தெரியாது.

என் கணவர் இனிமேல் என்னுடன் சேர்ந்து வாழப் போவதில்லை. அவர் காட்டிலிருந்து திரும்பி வருவார் என்றநம்பிக்கை எனக்கு இல்லை. நானும் எனது மகளும் தனித்து வாழப்போகிறோம் என்றார் முத்துலட்சுமி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+