For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொளத்தூர் மணியிடம் விடிய விடிய விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

வீரப்பன் பதுங்கியிருப்பது எங்கே எனக் கேட்டு கொளத்தூர் மணியிடம் விடிய விடிய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.தெரிந்த தகவலை மறைத்ததாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் மாநிலத் தலைவரான கொளத்தூர் மணியைப் போலீசார் திங்களன்று அவரதுஅலுவலகத்திலிருந்து கைது செய்து உளவுப் போலீசார் சேலத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு கொளத்தூர் மணியிடம் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர். வீரப்பன் பதுங்கியுள்ள இடம், மற்றும் அவனுடன்தொடர்புடைய ஆட்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால், கொளத்தூர் மணி உரிய பதில் அளிக்காத நிலையில் அவர் மீது வழக்குத் தொடுத்துள்ளனர். தகவல் தெரிந்திருந்தும்அதை மறைத்தாக அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டது குறித்து கியூ பிராஞ்ச் துணை எஸ்.பி. முத்துசாமி கூறுகையில், வீரப்பன் பற்றியதகவல்களை அவர் கூற மறுப்பதால், பிரிவினை வாதம், தகவல் சொல்ல மறுத்தல், பிற குற்றங்களைச் செய்ய ஆதரவாகசெயல்பட்டு சதியில் ஈடுபடுதல் போன்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X