பிளஸ் டூ விடைத்தாள் ஜெராக்ஸ் காப்பி விரைவில் கிடைக்கும்
சென்னை:
பிளஸ் டூ விடைத்தாள்களின் ஜெராக்ஸ் காப்பிக்காக விண்ணப்பித்திருந்த மாணவ-மாணவிகளுக்கு, இன்னும்ஓரிரு நாட்களில் அது கிடைக்கும் என்று தெரிகிறது.
தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் 40 ஜெராக்ஸ் மிஷின்கள் இதற்காக, தற்போது இரவு பகலாகச்செயல்பட்டு வருகின்றன. ஜூலை 4ம் தேதிக்குள் அனைத்து ஜெராக்ஸ் காப்பிகளும் வழங்கப்பட்டு விடும்.
ஜெராக்ஸ் காப்பி கிடைத்தவுடன், உடனடியாக சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசித்து விட்டு,அடுத்த 2 நாட்களுக்குள் மறு மதிப்பீட்டுக்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க வேண்டும். மறுகூட்டலுக்காகவும்இப்போதே சேர்த்து விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள்களின் ஜெராக்ஸ் காப்பியைக் கேட்டு மட்டும், 31,000 விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளதாகக்கூறப்படுகிறது. மறுகூட்டலுக்கு சுமார் 6,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கவுன்சலிங் தொடங்குவதற்கு முன்பாகவே இந்தமாணவர்களுக்கு, இதன் முடிவுகள் தெரிவிக்கப்படும்.
பிளஸ் டூ விடைத்தாள்களின் ஜெராக்ஸ் காப்பிகளை வழங்கும் முறை இந்த ஆண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.