இலங்கையிலிருந்து 17 அகதிகள் தமிழகம் வருகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கையிலிருந்து 17 அகதிகள் படகு மூலம் புதன்கிழமை தனுஷ்கோடி வந்தனர்.
இவர்கள் இலங்கையில் மன்னார், பேசாலை ஆகிய பகுதிகளிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு படகு மூலம் வந்தனர்.
இவர்கள் இந்தியா வருவதற்கு படகோட்டிகளுக்கு தலா ரூ 5,000 கொடுத்து வந்ததாகத் தெரிவித்தனர்.
இலங்கையிலிருந்து வந்த 17 அகதிகளில் 7 பேர் சிறுவர்கள். போலீஸார் இவர்களை தனுஷ்கோடி அகதிகள் முகாமில் தங்கவைத்துள்ளனர்.
இலங்கையில் கடந்த 18 ஆண்டுகளாக விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்துவருவதால் சண்டை நடக்கும் பகுதியில் உள்ள மக்கள் அகதிகளாக தமிழகத்துக்குத் தப்பித்து வந்த வண்ணம் உள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications