For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பனை சரணடைய வைக்கிறேன்: நெடுமாறன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இரு மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தால் காட்டுக்குச் சென்று வீரப்பனை சந்தித்து அவரை சரணடைய வைக்கிறேன் என்று தமிழர்தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் வியாழக்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

வீரப்பன் சரணடைகிறேன் என்று பல முறை கூறி விட்டார். ஆனால் இரு மாநில அரசுகளும் இதைக் காதில் போட்டுக் கொள்ளாமல்கூட்டு அதிரடிப்படையை காட்டுக்கு அனுப்பி வீரப்பனை வேவு பார்த்து வருகின்றனர்.

அதிரடிப்படையால் வீரப்பனை கண்டிப்பாகப் பிடிக்க முடியாது. அதிரடிப்படையை காட்டுக்கு அனுப்பியுள்ளதால் உயிர்ச்சேதமும்,பொருட்சேதமும் ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்காக வீரப்பனை சந்தித்துப் பேச நான் காட்டுக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன்.

இருமாநில அரசும் கேட்டுக் கொண்டால் உடனடியாகக் காட்டுக்குச் சென்று வீரப்பனை சரணடைய வைப்பேன். வீரப்பன்சரணடைய விருப்பம் தெரிவித்து கடந்த மார்ச் 29 ம் தேதி ஒரு ஒலி நாடாவை என்னிடம் கொடுத்தார். இந்த ஒலி நாடாவை நான்அப்போதே, இரு மாநில அரசுகளிடம் ஒப்படைத்து விட்டேன்.

கைது செய்யப்பட்டுள்ள கொளத்தூர் மணியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கொளுத்தூர் மணியை விடுவிக்கக்கோரியும், வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படை வீரர்கள் காட்டுக்குச் சென்றதைக் கண்டித்தும் வரும் 5 ம் தேதி மேட்டூரில்ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார் நெடுமாறன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X