சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறனுக்கு கொலை மிரட்டல்
சென்னை:
சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறனுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாகக் சன் டிவி அறிவித்துள்ளது.
இது தவிர சன் டிவி அலுவலகத்தை எரிக்கப் போவதாகவும் தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சன் டிவி நிறுவனத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2 நாட்களாகவே இந்த மிரட்டல் வருவதாகவும், தனது குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படுத்தப் போவதாகவும் மிரட்டல்வருவதாகவும் அந்தக் கடிதத்தில் கலாநிதி மாறன் கூறியுள்ளார்.
இதே போன்ற கடிதத்தை சென்னை நகர போலீஸ் கமிஷ்னருக்கும் கலாநிதி மாறன் அனுப்பியுள்ளார்.
பொன் முடியுடன் உணவுக் கிடங்கில் நுழைந்த சன் டிவி நிருபர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
இந் நிலையில் சன் டிவி நிருபரின் கைதை எதிர்த்துப் போராடி விடுதலையான தமிழகத்தைச் சேர்ந்த 150 நிருபர்களும் வரும்திங்கள்கிழமை ஆளுநரைச் சந்தித்து மனு கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.