சுதாகரனுக்கு ஜாமீன் மறுப்பு
சென்னை:
தனது உதவியாளரும், சின்ன எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் முன்னாள் அமைப்புச் செயலாளருமான கோபு ஸ்ரீதரை கொலைசெய்து விடுவதாக மிரட்டிய வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவின் மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன் தாக்கல் செய்த ஜாமீன் மனுதள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி கே.பாஸ்கரன், இவ்வழக்கில் சுதாகரன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துஉத்தரவிட்டார்.
தனது உதவியாளர் கோபுவைக் கொலை செய்து விடுவதாக துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக சுதாகரன் மேல் வழக்குத்தொடரப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய இன்னும் சிலரைப் போலீஸார் தேடி வருகிறார்கள்.
முன்னதாக, சின்ன எம்.ஜி.ஆர்.நற்பணி மன்றத்தில் செயலாளராக வேலை செய்து வந்த கோபு ஸ்ரீதர் சுதாகரன் தன்னைக் கொலைசெய்து விடுவதாக மிரட்டியதாகக் கடந்த ஜூன் 13 ம் தேதி போலீசில் புகார் செய்தார்.
இருவருக்கும் இடையே பண விஷயம் காரணமாக தகராறு இருந்ததாகவும் கோபு தனது புகாரில் கூறியிருந்தார். இதையடுத்துசுதாகரன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
போலீஸார் சுதாகரன் வீட்டில் சோதனை செய்ததில் அவர்களுக்கு 16 கிராம் ஹெராயின் கிடைத்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவின் கீழும் இவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.