For Daily Alerts
Just In
ஜெயலலிதா கொடும்பாவி எரிப்பு
திருப்பூர்:
கோவையில் முதல்வர் ஜெயலலிதாவைக் கண்டித்து திமுக மாணவர் அணியினர் கொடும்பாவி எரித்தனர்.
கருணாநிதி கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, கோவை, திருப்பூர் உட்பட 100 இடங்களில் ஜெயலலிதாவின்கொடும்பாவிகளை திமுக மாணவர் அணியினர் எரித்தனர். கோவை செஞ்சிலுவைச் சங்கம், திருப்பூரில் அவிநாசி மெயின்ரோடு,மேட்டுப்பாளையம், ஆகிய இடங்களில் கொடும்பாவி எரிப்புகள் நடந்தன.
கோவை ரேஸ்கோர்ஸ்சில் கொடும்பாவி எரிக்க முயன்ற 3 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் அதிமுக கொடியை எரித்த சம்பவத்திற்காக கைது செய்தனர்.
Comments
Story first published: Saturday, June 30, 2001, 5:30 [IST]