ராஜீவ் கொலை வழக்கு: நியூசிலாந்தில் தமிழர்- சீக்கியரிடம் சி.பி.ஐ. விசாரணை
சிட்னி:
ராஜீவின் கொலை வழக்கு பற்றிய வழக்குகள் முடிவடைந்து, கொலையாளிகளுக்குத் தண்டனையும் அளிக்கப்பட்டுவிட்டாலும், கொலை பற்றிய விசாரணை இன்னும் முடியவில்லை என்றே தோன்றுகிறது.
நியூசிலாந்தில் வசித்துக் கொண்டிருக்கும் 3 இந்தியர்கள், ராஜீவ் கொலையில் சம்பந்தப் பட்டுள்ளனர் என்றுசந்தேகப்பட்ட இந்திய புலனாய்வுத் துறையான சி.பி.ஐ., சத்தமில்லாமல் கடந்த ஏப்ரல் மாதம் அங்கு சென்று வந்தது.
அங்கு சி.பி.ஐயால் விசாரிக்கப்பட்டவர்களில் 2 பேர் தமிழர்கள், ஒருவர் சீக்கியர். ராஜீவ் கொலை பற்றி இந்த 3பேரிடமும் சி.பி.ஐ. துருவித் துருவி விசாரணை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், ராஜீவ் கொலைக்கும்இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்பது பற்றித் தெரியவில்லை.
விசாரணைக்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் சி.பி.ஐ.க்கு நியூசிலாந்து புலனாய்வுத் துறையினர் அளித்தனர்.ஆனாலும், "விசாரணை பற்றிய விவரங்கள் பற்றி நாங்கள் எதுவும் கூற முடியாது; சி.பி.ஐ.தான் கூற வேண்டும்"என்று பதுங்கிக் கொள்கிறார்கள் நியூசிலாந்து போலீஸார்.
இந்தக் கொலை வழக்கு ஒரு சென்சிட்டிவான விஷயம் என்பதால், சி.பி.ஐ.யின் இந்த நியூசிலாந்து விஜயம் படுரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி, தமிழகத்திலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் தேர்தல் பிரசாரம் செய்ததையும்,அப்போது விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டுக்கு அவர் பலியானதையும் அவ்வளவு எளிதாக யாரும்மறந்திருக்க முடியாது.
பல ஆண்டுகள் நடந்த இந்தக் கொலை வழக்கின் தீர்ப்பில், 7 பேருக்குத் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டதும்அனைவருடைய நினைவிலும் இருக்கலாம்.
ஐ.ஏ.என்.எஸ்.