பிஜியில் பரபரப்பு: ராணுவ தலைவரை கொல்ல திட்டம்
சுவா:
பிஜி நாட்டில் தேர்தல் நடப்பதற்கு 6 வாரங்களே இருக்கும் நிலையில், பிஜியின் ராணுவ தலைவரையும், உயர்ராணுவ அதிகாரிகளையும் கொல்லத் திட்டமிடப்பட்டு இருப்பதாக வந்த தகவல் அங்கு பரபரப்பை எற்படுத்திஉள்ளது.
இந்தச் செய்தி பிஜியில் இருந்து வரும் சன் என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. கில் ப்ளாட் என்றதலைப்பில் வெளியாகியுள்ள இச்செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:
ராணுவ தலைவர் கமான்டர் கமோடர் ஃப்ராங்க் பைனிமாராமாவையும், மற்றும் சில உயர் ராணுவஅதிகாரிகளையம் கொல்ல திட்டம் தீட்டப்பட்டு இருந்தது.
ராணுவத்தின் யுத்த யுக்திகள் தீட்டும் குழுவில் இருக்கும் அதிகாரிகளால்தான் இந்தத் திட்டம் தீட்டப்பட்டது.இவர்கள் ஆகஸ்டு மாதம் நடக்க இருக்கும் தேர்தலுக்கு முன் கமான்டரைக் கொல்ல வேண்டும் என திட்டம்தீட்டியிருந்தனர். இத்திட்டத்தைத் தீட்டிய அதிகாரிகளில் சிலர், சென்ற ஆண்டு நவம்பர் மாதம் ஜார்ஜ் ஸ்பைட்நடத்திய கலகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்தக் கொலைத் திட்டத்தில் ஈடுபட்டதாக, 2 கர்னல்கள் மீதும், ஒரு ராணுவ மேஜர் மீதும் பைனிமாராமா குற்றம்சுமத்தி உள்ளார். இந்த அதிகாரிகள் சென்றமுறை நடத்தப்பட்டது போன்ற மற்றொரு கலகத்தை நடத்ததிட்டமிடிருந்தார்கள் என பைனிமாராமா குற்றம் சாட்டியுள்ளார்.
கொலைத் திட்டத்தில் ஈடுபட்டுள்தாக கூறப்படும் அதிகாரிகளை "சன்" பத்திரிக்கையின் தலையங்கம் கடுமையாகசாடி உள்ளது. கொலைத் திட்டம் தீட்டியிருந்த அதிகாரிகள், முதலில் நாட்டைப் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும்.அதன் பின்னரே அவர்கள் தங்கள் சொந்த நலனை எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் அந்தத் தலையங்கத்தில்கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் ஜார்ஜ் ஸ்பைட் தலைமையில் நடந்த கலவரத்திற்கு பின்னர் அங்கு சட்டம் ஒழுங்கும் சீராகஇல்லை. சகஜ நிலையும் இன்னும் திரும்பவில்லை,
ஐ.ஏ.என்.எஸ்.