"மதம்" பிடித்த காளையை சுட்டுக் கொன்றது டெல்லி போலீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

டெல்லியில், "மதம்" பிடித்த முரட்டுக் காளை ஒன்றைப் போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

திங்கள் கிழமை அதிகாலை 1 மணி அளவில் கிழக்கு டெல்லியில், ஒரு "மதம்" பிடித்த காளை திடீரென்றுமுரட்டுத்தனமாக ஓடத் துவங்கியது.

அது டெல்லி நகர வீதிகளில் தாறுமாறாக ஓடி, வாகனங்களை சேதப்படுத்தியது.

உடனே மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்து அவர்கள் உதவியை கோரினர். அவர்கள் கார்ப்பரேஷன்ஊழியர்களுக்குத் தெரியப்படுத்தினர்.

போலீசாரும்,கார்ப்பரேஷன் ஊழியர்களும் காளையைத் துரத்த ஆரம்பித்தனர். ஆனால், அந்தக் காளையோஅவர்களிடம் சிக்காமல், டிமிக்கி கொடுத்து ஓடிக் கொண்டே இருந்தது.

காளையைப் பிடிக்க முடியாது என்று உணர்ந்த போலீசார் அதை சுட்டுக் கொன்றனர்.

ஆனாலும், அதற்குள்ளாகவே 3 கார்களையும், 2 ஸ்கூட்டர்களையும் இந்தக் காளை சேதப்படுத்தி விட்டது.

இந்த ஆண்டுத் துவக்கத்தில், டெல்லியில் மாடு முட்டிய சம்பவங்களில் 3 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+