ராமேஸ்வரத்தில் 4 மீனவர்களைக் காணோம்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் காணாமல் போனார்கள்.
வேதமுத்து, லிங்கம், ஜெய்கிருஷ்ணா மற்றும் ஆறுமுகம் ஆகிய 4 மீனவர்களும், ஜூலை 7ம் தேதி மீன்பிடிப்பதற்காக இயந்திரப் படகு ஒன்றில் கடலுக்குள் சென்றனர்.
ஆனால், அந்த 4 மீனவர்களும் கிடைக்காததால், ராமேஸ்வரத்தில் உள்ள மீன்வளத் துறையில் அவர்களின்உறவினர்கள் இதுகுறித்து ஒரு புகாரைக் கொடுத்துள்ளனர்.
கடந்த மாதம் வரை இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட 66 தமிழக மீனவர்களில், 22 பேர் மட்டுமேவிடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் புதன்கிழமை மாலைதான் தமிழகம் திரும்பினார்கள். இந்நிலையில்,ராமேஸ்வரத்தில் 4 மீனவர்கள் காணாமல் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications