கருணாநிதி பயப்படுவது ஏன்? கம்யூனிஸ்ட் கேள்வி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கருணாநிதியிடம் போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுவது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ளவிசாரணைக் கமிஷனை திமுக நிராகரித்திருப்பது சரியல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
பாரபட்சமற்ற விசாரணைக்கு திமுக ஏன் பயப்பட வேண்டும்? கருணாநிதியின் பயத்தைப் பார்த்தாலே அவர்உண்மை வெளிவந்துவிடும் என அஞ்சுவதாகத் தான் நினைக்கத் தோன்றுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் விலகியது நல்லது தான். அந்தக் கட்சியை பா.ஜ.க.மீண்டும் சேர்க்கக் கூடாது.
அமெரிக்காவின் நிர்பந்தத்தினால் தான் பாகிஸ்தானுடன் வாஜ்பாய் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அந் நாட்டுடன்காஷ்மீர் குறித்து வாஜ்பாய் ஏதும் பேசக் கூடாது என்றார் மொகித் சென்.












Click it and Unblock the Notifications