புதுவையில் காங்கிரஸ்-அ.தி.மு.க. உறவில் விரிசல்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் -அ.தி.மு.க. கூட்டணியின் கூட்டணியில் விரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளது.
ஆனால், தற்போது காங்கிரஸ்-அ.தி.மு.க. கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றி உள்ளது.
இதுகுறித்து, பாண்டிச்சேரி அ.தி.மு.க. எம்.எல்.ஏவான அன்பழகன் கூறும்போது:
பாண்டிச்சேரியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். எதிர்கட்சியனருக்கு கொடுக்கப்படும்உரிமைகள்கூட கூட்டணி கட்சியினருக்கு கொடுக்கப்படுவதில்லை. உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
இது குறித்து நான் முதல்வர் சண்முகத்திடம் கூறினேன். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும்எடுக்கவில்லை. இது வருந்தத்தக்கது என்றார் அன்பழகன்.
தமிழகத்தில் ஏற்கனவே காங்கிரஸ்-அ.தி.மு.க. இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில்,பாண்டிச்சேரியிலும் அ.தி.மு.க. போர்க்கொடி உயர்த்தி இருப்பது, அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.