கள்ளக் காதல்: போலீஸ் வலையில் சிக்கிய டி.வி. நடிகர்
சென்னை:
காதல் மனைவியை ஏமாற்றி விட்டு, வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த டிவி நடிகரைப் போலீசார்பொறி வைத்துப் பிடித்தனர்.
இவரும் கே.கே. நகரைச் சேர்ந்த புனிதா என்ற பெண்ணும் கடந்த 1995ஆம் ஆண்டு காதலித்து பெற்றோர்அனுமதியுடன் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் ஆனந்துக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு அந்தப் பெண்ணுடன் தலைமறைவாகிவிட்டார் ஆனந்த்.
அவரைக் காணாமல் தவித்த புனிதா போலீசில் புகார் செய்தார். காலம் கழிந்ததே தவிர கணவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் போலீசாரின் யோசனைப்படி கடந்த 14 ந்தேதி ஆனந்தின் முதலாமாண்டு நினைவஞ்சலி என்றுபத்திரிக்கைகளில் விளம்பரம் செய்தனர்.
இதைக்கண்ட ஆனந்த் பதறியடித்துக் கொண்டு கே.கே. நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். தான் உயிருடன்இருக்கும் போது இறந்து விட்டதாக விளம்பரம் செய்துள்ளதாக அவர் போலீசிடம் கூறினார்.
இதையடுத்து, அதற்காகவே காத்திருந்த போலீசார் ஆனந்தை ஒரே அமுக்காக அமுக்கி விட்டனர்.
விசாரனையில் நடந்த உண்மைகளைத் தெரிவித்த ஆனந்தைக் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.