For Daily Alerts
Just In
வாஜ்பாய்க்கு பாகிஸ்தான் முறைப்படி அழைப்பு
இஸ்லாமாபாத்:
அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு இந்தியப் பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தானுக்கு வரவேண்டும் என்றுஅதிகாரப்பூர்வமான அழைப்பை பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது, அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்கு இந்தியப் பிரதமர் பாகிஸ்தானுக்குவரவேண்டும் என்று வாய்மொழியாக அழைப்பு விடுத்தார் முஷாரப். வாஜ்பாயும் வாய்மொழியாகவே ஓ.கே.என்று சொல்லிவிட்டார்.
பேச்சுவார்த்தை முடிந்து ஒரு வாரம் ஆன நிலையில், முறைப்படியான அழைப்பு பாகிஸ்தான் ஜனாதிபதியிடமிருந்துதிங்கள்கிழமை இந்தியப் பிரதமருக்கு வந்து சேர்ந்தது.
இதைப் போலவே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கும் பாகிஸ்தானுக்கு வரவேண்டும் என்றுபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தார் தனியாகக் கடிதம் அனுப்பியுள்ளார்.
Comments
Story first published: Friday, June 29, 2001, 5:30 [IST]