For Daily Alerts
Just In
கிரிக்கெட்: இந்தியா மீண்டும் படுதோல்வி
கொழும்பு:
இன்று (வியாழக்கிழமை) இந்திய-நியூசிலாந்து அணிக்ளுக்கிடையே கொழும்பில் நடந்த ஒரு நாள் போட்டியில்இந்தியா படுதோல்வியடைந்ததது.
இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப் பட்ட 48 ஓவர்களில் 46.4 ஓவர்களில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்கள் எடுத்தது. இதில் டயன் நாஸ் 42 ரன்கள் எடுத்தார்.
அடுத்து ஆடிய இந்திய அணி 39.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன்கள் மட்டும்எடுத்தது.
வீரேந்திர சேவாக் மட்டும்தான் அதிக பட்சமாக 33 ரன்கள் எடுத்தார்.
இந்தத் தோல்வியின் மூலம் , இந்தியா கடந்த 3 மேட்ச்களிலும் தொடர் தோல்வியைத் தழுவியுள்ளது.
இந்தியாவிற்கு இன்னும் 3 மேட்ச் உள்ளன.
Comments
Story first published: Friday, May 18, 2001, 5:30 [IST]