திட்டமிட்டபடி உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என்கிறார் அமைச்சர்
மதுரை:
உள்ளாட்சித் தேர்தல் முன்பே திட்டமிட்டபடி நடக்கும் என்றும் அதற்கு அரசு தயாராக இருப்பதாகவும் தமிழகஉள்ளாட்சித்துறை அமைச்சர் துரைராஜ் கூறினார்.
உள்ளாட்சித் தேர்தலை முன்பே திட்டமிட்டபடி நடத்த அரசு தயாராக உள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலின் போதுவாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் இது தொடர்பான படிவம் 6-யை நிரப்பிக் கொடுத்து தங்கள்பெயர்களை சேர்த்துக்கொள்ளலாம்.
மதுரை மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. அவ்வாறு ஏற்பட்டாலும் அதைப் போக்கசிறப்புக் கவனம் செலுத்தப்பம். இதற்காக ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுளளது.
சென்னையில் குடிநீர்ப் பிரச்சனை இப்போது இல்லை. மதுரை, சென்னை உட்பட பல நகரங்களில் மழை பெய்துவருவதால் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. மேலும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் நிரம்பிவருகிறது. இதனால் குடிநீர்ப் பற்றாக்குறை விரைவில் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications