கையில் துடைப்பத்துடன் ஜெ. வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் துடைப்பத்தைத் தூக்கிக் காட்டி பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான கண்காட்சியை முதல்வர்ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
இதைத் தடுக்கவும் மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பற்றி ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் ஒருநடமாடும் கண்காட்சி சென்னையில் நடைபெற்றது.
கண்காட்சியை முதல்வர் ஜெயலலிதா துவக்கிவைத்தார்.
கண்காட்சியைத் துவக்கி வைத்து முதல்வர் பேசுகையில், எங்கள் வீட்டிலும் தென்னங்கீற்று துடைப்பத்தைத் தான்பயன்படுத்துகிறோம் என்றார். மேலும் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
கண்காட்சியில் கண்ணாடி ஜாடிகள், துணியாலான டீ பில்டர், பாக்கு மட்டையாலான பிளேட்கள் என அனைத்துப்பொருட்களும் இடம்பெற்றிருந்தன.
விழாவில் செய்தி மற்றும் வனத்துறை அமைச்சர் திருநாவுக்கரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications