விழா மேடையில் மத்திய அமைச்சர் ஜோஷி மயக்கம்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அருகே விழா ஒன்றில் கலந்து கொண்டிருந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முரளிமனோகர் ஜோஷிக்கு விழா மேடையிலேயே திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சைஅளித்து வருகிறார்கள்.

காஞ்சிபுரம் அருகே உள்ள ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை ஜோஷிவந்திருந்தார்.

அவர் விழா மேடைக்கு காலை 11.30க்கு வந்தார். தாகம் அதிகமாக இருந்த காரணத்தால் மேடையில் அலங்காரகண்ணாடி ஜாடி தம்ளரில் வைக்கபட்டிருந்த வண்ணப்பொடிகள் கலந்திருந்த நீரை குடித்தார்.

சிறிது நேரம் கழித்து அவர் தனக்கு வாந்தி, மயக்கம் வருவது போல் உள்ளது என்று கூறி மேடையை விட்டுஇறங்கிச் சென்றார். சிறிது நேரம் கழித்து மேடைக்கு ஏற படிகளில் ஏற முற்பட்ட போது அவருக்கு மயக்கம்ஏற்பட்டது.

அவர் உடனடியாக விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிரசிகிச்சை அளித்து வருகின்றனர்.

குடிநீர் என்று நினைத்து, மேடையில் அலங்கார கண்ணாடி ஜாடி தம்ளரில் வைக்கப்பட்டு இருந்த சோடியம் கலந்தநீரை குடித்ததால் ஜோஷிக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+