For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலில் மூழ்கி உயிருடன் மீண்ட 4 இளைஞர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் கடலில் மூழ்கிய நான்கு இளைஞர்களை கடற்கரை சமூக சேவை அமைப்பினர் உயிருடன் மீட்டு கரைசேர்த்தனர்.

சென்னையில் முக்கிய கடற்கரைகளில் ஒன்று எலியட்ஸ் கடற்கரை. மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர் கடற்கரைஅளவுக்கு கூட்டம் இல்லாவிட்டாலும் கூட இங்கு ஓரளவு கூட்டம் இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை எலியட்ஸ் கடற்கரைப் பகுதியில் நான்கு இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போதுதிடீரென வந்த பெரிய அலையில் நான்கு பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து கடற்கரைநண்பர்கள் என்ற சமூக சேவை அமைப்புக்குத் தகவல் தரப்பட்டது. கடலுக்குள் மூழ்குபவர்களை மீட்பதற்காக இந்தஅமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் விரைந்து வந்த கடலில் மூழ்கிய 4 பேரையும் பத்திரமாக மீட்டுக் கொண்டுவந்தனர். மீட்கப்பட்ட நான்கு பேரும் கே.கே.நகரைச் சேர்ந்தவர்கள். அவர்களுடன் 2 இளம் பெண்களும்வந்திருந்தனர். ஆனால் அவர்கள் கடலில் குளிக்காததால் தப்பினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X