For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பின்லாந்துடன் தமிழகம் ரூ. 86 கோடி ஒப்பந்தம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூலூரிகளில் அதிநவீன மருத்துவக் கருவிகளை பொருத்துவது தொடர்பாக பின்லாந்து நாட்டைச்சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் தமிழக அரசு ரூ. 86 கோடி அளவிலான ஒப்பந்தத்தைஏற்படுத்தியுள்ளது.

இந்த ஒப்பந்தம் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் வெள்ளிக்கிழமைகையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி தமிழகத்திலுள்ள அனைத்து அரசுமருத்துவமனைகளிலும் பின்லாந்து நாட்டின் அதி நவீன மருத்துவக் கருவிகள்வழங்கப்படும்.

இதய நோய், சிறுநீரக நோய்கள், பால்வினை நோய்கள் ஆகிய நோய்களைஉடனடியாக கண்டறிந்து உரிய சிகிச்சை தரும் வகையிலான நவீன மருந்துகள்,கருவிகளை பின்லாந்து நிறுவனம் தமிழகத்திற்கு வழங்கும். இதைத் தவிர தொழில்நுட்பஉதவியையும் பின்லாந்து வழங்கும்.

ரூ. 86 கோடி நிதியில் 70 சதவீதத்தை கடனாகவும், மீதள்ள 30சதவீத நிதிமானியமாகவும் பின்லாந்து நிதிநிறுவனத்தால் தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X