ஆசிய கோப்பை டெஸ்ட்டில் இந்தியா பங்கேற்காது
டெல்லி:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்கேற்காது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன் படி கனடாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்கேற்கவில்லை. பாகிஸ்தானில்சுற்றுப்பயணம் செய்ய இந்தியா முன்பு முடிவு செய்திருந்தது. அதுவும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் வரும் 29ம் தேதி முல்டானில் நடைபெறவிருக்கும் ஆசிய டெஸ்ட் சாம்பியன் போட்டியில் இந்தியாவிளையாடுமா என்ற கேள்வி பல நாட்களாக நிலவி வந்தது.
சில தினங்களுக்கு முன் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உமா பாரதி, பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்.இந்தக் கடிதத்தில், வரும் 29ம் தேதி முல்டானில் பாகிஸ்தான் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில்இந்தியா பங்கேற்க அனுமதி அளிக்கக்கூடாது என்று கூறியிருந்தார்.
உமாபாரதியின் கடிதம் குறித்து, உள்துறை அமைச்சர் அத்வானி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்ஆகியோருடன் பிரதமர் வாஜ்பாய் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்குப் பின், ஆசிய கோப்பை டெஸ்ட் போட்டிகளில் இந்தியா பங்கேற்காது என்ற முடிவுசெய்யப்பட்டது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில், கடந்த முறை கோப்பையை வென்ற பாகிஸ்தானும்,புதிதாக டெஸ்ட் போட்டிகள் விளையாட தொடங்கியுள்ள வங்க தேசமும் பங்கேற்கின்றன.












Click it and Unblock the Notifications