விநாயகர் சதுர்த்தி... இன்று இந்து முன்னணி ஊர்வலம்
சென்னை:
இந்து முன்னணி அமைப்பின் சார்பில் சென்னையில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்படுகிறது.
நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து இந்த ஊர்வலங்கள் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. அனைத்து ஊர்வலங்களும்கடற்கரை சீரணி அரங்கை அடைந்து அங்கே விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.
இந்த ஊர்வலங்களையொட்டி போலீஸார் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர். தடைகளை மீறினால்கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சனிக்கிழமை நடந்த சிவசேனை விநிாயகர் சிலை ஊர்வலம் மிகவும் அமைதியாக நடந்து முடிந்தது. மாலை 4மணிக்கு புளியந்தோப்பு பகுதியில் துவங்கிய ஊர்வலம் பல்வேறு பகுதிகள் வழியாககடற்கரையை அடைந்தது.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன், புளியந்தோப்புப் பகுதியில் நேரடியாக பாதுகாப்புஏற்பாடுகளைப் பார்வையிட்டார்.
ஊர்வலத்தில் வித்தியாசமான பல விநாயகர்கள் சிலைகளாக கொண்டு வரப்பட்டார்கள். இரவு 7.30 மணியளவில்அனைத்து விநாயகர்களும் கடலில் கரைக்கப்பட்டனர். இந்த ஊர்வலத்தில் அதிகபட்சமாக 25 அடி உயர விநாயகர்சிலை இடம்பெற்றிருந்தது.