கோயம்புத்தூர் வங்கிக் கொள்ளை: 12 கொள்ளையர்கள் கைது
கோயம்புத்தூர்:
கடந்த ஜூன் மாதம் கோயம்புத்தூர் அருகே உள்ள ஒரு வங்கியில் ரூ. 50 லட்சம் பணத்தையும் நகைகளையும்கொள்ளையடித்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிறகு வங்கியில் இருந்த ரூ.50 லட்சம் பணத்தையும், 11, 695 கிராம் தங்க நகைகளையும் அந்தக் கும்பல் சுருட்டிக்கொண்டு சென்று விட்டது.
இதையடுத்து அந்தக் கொள்ளையர்களைப் பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு, வலை வீசி தேடப்பட்டுவந்தது.
இந்நிலையில் கடந்த 27ம் தேதி தமிழ்நாடு- கேரள எல்லையில் உள்ள வால்பாறை என்ற இடத்தில் ஒருசந்தேகத்திற்குரிய ஆசாமி நகைகளை வைத்துக் கொண்டு திரிவதாக போலீசுக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து கோயம்புத்தூர் போலீஸ் கமிஷ்னர் நரிந்தர் பால் சிங் உத்தரவின் பேரில் ஒரு படை விரைந்துசென்று அந்த ஆசாமியைக் கைது செய்தனர்.
பிறகு அவனிடம் விசாரித்ததில், அந்த நகைகள் அனைத்தும் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்டதுதான் என்றுஒத்துக் கொண்டான்.
பிறகு கொள்ளையில் ஈடுபட்ட மற்றவர்களின் இருப்பிடத்தையும் அவன் போலீசாரிடம் கூறினான்.
இதையடுத்து கடந்த 3 நாட்களில் கொள்ளையில் ஈடுபட்ட மேலும் 11 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்கள் வைத்திருந்த 6, 318 கிராம் தங்க நகைகளையும், அவர்களிடமிருந்த 4 செல்போன்கள், 4 மோட்டர்பைக்குகள் மற்றும் பேங்கில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.75,000 மதிப்புள்ள கம்யூட்டர்களும் பறிமுதல்செய்யப்பட்டன.
இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். இவர்களை கைது செய்வதுடன்,மீதமுள்ள நகைகளும் விரைவில் கைப்பற்றப்படும் என்று போலீஸ் கமிஷ்னர் நரிந்தர் பால் சிங் கூறினார்.












Click it and Unblock the Notifications