சுடாதீர்கள்...: போலீசுக்கு ஜெ. அறிவுரை
சென்னை:
துப்பாக்கி சூடு மற்றும் தடியடியை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுரைகூறியுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று தெரிவித்தார்.
விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது,
போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் போது எந்த சூழ்நிலையிலும் துப்பாக்கி சூடு நடத்த வேண்டாம் என்றும்,முடிந்த அளவு தடியடியைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளேன்.
மேலும் பொது மக்களுக்கு இடையூறு கொடுக்காத வண்ணம் தங்கள் பணியைச் செய்யுமாறும் நான் அவர்களைக்கேட்டுக்கொண்டுள்ளேன். மேலும் ரூ.9 கோடி செலவில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தண்ணீர் பீய்ச்சிஅடிக்கும் வாகனம் வழங்க இந்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் துப்பாக்கி சூட்டை தவிர்த்து தண்ணீர் மூலம்அடித்தே கலவரக் கும்பலைக் கலைத்துவிடலாம்.
சாலை விபத்துக்களைத் தவிர்க்கவும், விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும்நெடுஞ்சாலை ஓரங்களில் காவல்நிலையங்களும், மருத்துவமனைகளும் அமைக்க முடிசெய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னை வண்டலூர் அருகே கூடுவாஞ்சேரியில், புதிய காவல் பயிற்சிக் கல்லூரி அமைக்கவும்திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 126 புதிய உள்ள மகளிர் காவல்நிலையங்கள் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.












Click it and Unblock the Notifications