சட்டசபையில் போக்குவரத்து அமைச்சருக்கு நெஞ்சுவலி
சென்னை:
சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் நைனார் நாகேந்திரன்நெஞ்சுவலி காரணமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆனால், போக்குவரத்துத்துறை அமைச்சர் நைனார் நாகேந்திரன், தனக்கு சோர்வாக இருப்பதால்இக்கேள்விகளுக்கான பதிலை 3 நாட்கள் கழித்து கூற அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சிறிது நேரம் கழித்து அவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதையடுத்து, அவர் உடனடியாக அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.
அமைச்சருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூறுகையில், "அமைச்சருக்கு ஓய்வு தேவை. இன்னும் ஒரு நாள்அவர் மருத்துவமனையில் இருந்தால் போதும். அதன் பின் அவர் வீடு திரும்பலாம்" என்று கூறினர்.
அமைச்சர் திருநெல்வேலி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (திங்கள்கிழமை) காலைதான் சென்னைதிரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications