ரேஷன் கடை ஊழியர்கள் தவறு செய்தால் கிரிமினல் நடவடிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தவறு செய்தால், அவர்கள் மேல் கிரிமினல் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று தமிழக உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் தனபால் கூறினார்.
உணவுப் பொருள்களைப் பாதுகாத்து வைக்கும் கிட்டங்கிகளில், எம்.எல்.ஏக்கள் நுழைவதற்குக் கூட அனுமதிகிடையாது என்பது சட்ட விதி.
இங்கிருந்து ரேஷன் கடைகளுக்குச் செல்லும் பொருள்கள், எடை குறைவில்லாமல் சென்று சேர்கின்றனவா என்றுகண்காணிக்கப்படுகிறது.
ரேஷன் கடைகளில் அடிக்கடி சென்று சோதனை நடத்துவதற்காக, எம்.எல்.ஏக்கள் கொண்ட குழுக்களைஅமைக்கும் யோசனை குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது.
தவறு செய்ததற்காக, இதுவரை 1,587 ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களில்25 பேர் மீது, கள்ளக் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்தனபால்.












Click it and Unblock the Notifications