Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேதாரண்யத்தில் தீ விபத்து: மக்கள் தாக்கி 3 போலீசார் காயம்

Subscribe to Oneindia Tamil

வேதாரண்யம்:

நாகப்பப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே 2 வீடுகளில் திடீரென தீப்பிடித்ததையடுத்து, போலீசாருக்கும்,பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் தாக்கியதில்3 போலீசார் காயமடைந்தனர்.

வேதாரண்யத்தையடுத்த வாய்மேடு அருகேயுள்ள உடையதேவன் காடு பகுதியைச் சேர்ந்த முருகேசன் மற்றும்இருளப்பன் ஆகிய இருவருக்கும் சொந்தமான மாட்டுக் கொட்டகைகள் சனிக்கிழமை இரவு திடீரென தீப் பிடித்துக்கொண்டன. இந்த தீயில் மாட்டு க் கொட்டகைகள் சேதமடைந்தன.

இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், வாய்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில், போலீசார் தீபிடித்த இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்பு வண்டியும் சம்பவ இடத்திற்கு சென்றது.

அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் போலீசாரையும், தீயணைப்பு வீரர்களையும்,"எல்லாம் முடிந்த பிறகு எதற்கு வந்தீர்கள்?" என கேட்டு தகராறு செய்தனர்.

இந்நிலையில் தீ விபத்து குறித்து கேள்விப்பட்ட வேதாரண்யம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் போலீஸ்படையுடன் அங்கு வந்தார்.அவர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் போலீசாரின் சமாதானவார்த்தைகளை மக்கள் ஏற்க மறுத்ததால் அங்கு பெரும் கூச்சலும், குழப்பமும் நிலவியது.

இந்த நிலையில் சிலர் மரங்களை வெட்டி நடு ரோட்டில் போட்டு போக்குவரத்தை தடை செய்ய முயன்றனர்.இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். ஆனாலும் கூட்டம் கலையவில்லை. எனவே போலீசார் வானத்தைநோக்கி 2 முறை சுட்டதும் கூட்டம் கலைந்து ஓடியது.

அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த 2 போலீஸ் ஜீப்புகள் மற்றும் அந்தப் பகுதியாக வந்த வாகனங்கள் மீது,மக்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் வாகனத்தின் கண்ணாடிகள் சேதமடைந்தன.

போலீசார் மீது மக்கள் கல்வீசி தாக்கியதில் வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னச்சாமி மற்றும் போலீசார்பாலசுப்ரமணியமும் வேறொரு போலீசாரும் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.

தற்போது இங்கு ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளாதால் அங்கு அமைதி நிலவி வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகாலை சம்பவ இடத்தை வேதாரண்யம் எம்.எல்.ஏ. வேதரத்தினம் பார்வையிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக உடையத்தேவன் காடு கிராமத்தைச் சேர்ந்த காளியப்பன் (51), பக்கிரி சாமி (41). ரஜினி(21), உத்திராபதி (20) உள்ளிட்ட 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+